மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 19 November 2015

33. சொர்க்கம் கிடைக்க வழிகள்.

“கருடனே! யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை பற்றி கூறுகிறேன் கேள்! அயோத்தி, மதுரா, காசி, அவந்திகா, துவாரகா ஆகிய ஏதாவது ஒரு தலத்தில் இறப்பவன் ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான். ராமர் அல்லது கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிக்கொண்டே இறப்பவனும் மோட்சத்தை அடைவான்.

குழந்தை, பசு,
அந்தணர் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஆபத்து நேரிடும் போது, தன் உயிரைவிடவும் துணிந்து அவர்களை காப்பாற்றுபவனும் முடிவில் தேவர்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் சொர்க்கத்தை அடைவான். பூமி, பசு,யானை ஆகியவற்றை தானம் கொடுத்தால் மோட்சம் கிடைக்கும்.

கிணறு, குட்டை, ஆலயம் ஆகியவற்றை புதுபித்தவன், அவற்றை உருவாக்கியவர்களை விட புண்ணியம் செய்தவன் ஆவான்.இவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தவன் வைகுண்டத்தை அடைவான்.

அறநெறியில் வாழ்ந்து, பிறருக்கு நல்லதையே செய்து, கேம காரியங்களை விடாமல் செய்து, தான தர்மங்களை இயன்றவரை செய்து வாழ்ந்தவன் சொர்க்கத்தை அடைவான்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், தினமும் விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வாழ்ந்து, முடிவில் தர்ப்பைப்புல்லின் மேல் படுத்துக்கொண்டு கையில் துளசி, தர்ப்பை இலைகளை கையில் ஏந்தியபடி பகவான் நாமத்தை சொல்லிய படி இறப்பவன் சொர்க்கத்தை அடைவான்.” இவ்வாறு பகவான், சொர்க்கம் யாருக்கு கிடைக்கும் என்பதை விளக்கமாக கருடனுக்கு கூறினார்.

No comments:

Post a Comment