மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Monday 16 November 2015

இந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு

ந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு சமுதாய நன்மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. மனைவியைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் பெற்ற தாய்க்குச் சமம்.

மேல் நாடுகளில்-பெற்ற தாயைத் தவிர அனைத்து பெண்களும் மனைவிக்குச் சமம்.  இந்து தர்ம கோட்பாட்டால் காம நோய்கள் உருவாகுவதே குறைவு. மேல்நாட்டுக் கோட்பாட்டால் காம நோய்களால் பாதிக்கப் படாதவர்கள் குறைவு.  

ஒரு தொழில் ஸ்தானத்தில் (அலுவலகம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியிடம்) ஒருமுறை காம நடவடிக்கை நிகழ்ந்துவிட்டால் அங்கிருந்து தொழில் தேவதை வெளியேறிவிடும்.

காம தேவனின் ஆட்சி துவங்கிவிடும். காமம் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தால்-தொழில் நலிவடையத்துவங்கும்.

ஒரு பெண்ணை அவளது அனுமதி-ஆசையின்றி அவளிடம் உறவு கொண்டால்.... அந்த வினாடி முதல் அந்த ஆணின் வாழ்க்கை, குடும்ப அமைப்பு சர்வ நாசமடையத் துவங்கிவிடும்.

ஒரு தனிமனிதனது நிலையே இப்படி என்றால், இந்தத் தவற்றை ஒரு நாட்டின் மன்னன் செய்தால்...?

இதைத் தான் பில்கிளிண்டன் செய்தார். அமெரிக்கா நாசமடையத் துவங்கியுள்ளது இதனால் கூட இருக்கலாம்  என்பது புரிகிறதா? பில்கிளிண்டன் தனது அலுவலக உதவியாளினி மோனிகா லெவின்ஸ்கியிடம் மேலே சொன்னது போலத் தான் நடந்து கொண்டார். இதற்குப் பரிகாரம் கிடையாது. இதற்குண்டான தண்டனை என்னவென்று தெரியுமா? கருடபுராணம் கூறுகிறது: விந்துக் கடலில் வாழ்க்கை வாழ வேண்டும். விந்து தான் மூன்று வேளை உணவும்.

No comments:

Post a Comment